பக்கங்கள்

பட்டமரத்தின் இலை...



தனியொரு மோன நிலையில்
மரத்தினில் யாழ் மீட்டி
இசைக்குதொரு இலை

பிரிவின் எச்சம்...


எனக்காயும் உனக்காயும்
காத்திருந்த நாட்கள்
பனிநிறைந்த காட்டில்
சாம்பலாய் மாறிட

சருகுகளால் நிறைந்திருக்கும்
நந்தவனத் தோட்டத்தில்
எப்படித்தான் தேடிட
நமக்கான பூக்களை

இரவு...



இரவென்பது மாயங்களுடன் கலந்து
இமைகளை இணைத்து வைக்கும்
இயற்கையின் இரட்டை நாதங்களில்
இயல்பான ஒன்றாகவே

இப்படியாக மனிதர்கள் - 3

பாகம் - 3 (இறுதி பகுதி)

முகிலனின் அருகில் நின்றிருந்த பாட்டி " அட பாவமே வயசான மனுஷன் பசியில கெடக்கும் போலயே" என்று பரிதாப பட்டவாறே அந்த பெரியவரை கூவி அழைத்தார் " இந்தா பெரியவரே  இங்க வாங்க " பாட்டியின் அழைப்பை ஏற்று அவரும் ரோட்டைக் கடந்து வந்தார்.

சாதியின் பெயரால் இன்னுமொரு மரணம்...




இன்னும் எத்தனை பேரை சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் காவு  குடுக்க போகிறோம்.. இன்னும் எத்தனை பெரியார்கள் வேண்டும் நம்மை திருத்துவதற்கு.. மனம் துடிக்கிறது

மரணம்

இன்னும் பலரை காவு கொள்ள காத்திருக்கும் சாதியின்  பெயரால்...




மரணம் பல சுவடுகளை
நம்முன் விட்டுச் செல்கிறது

சமூக சீரழிவின் எதிரொலியாய்
சில எழுந்து நிற்கின்றன