பக்கங்கள்

சிதறல் - 15

நிரம்பாத...
--------------

நேற்றைய மழைக்கு
முற்றத்தில் வைத்திருந்த
பாத்திரங்கள் அனைத்தும்
நிரம்பி விட்டன - ஆயினும்
இன்னமும் இருக்கிறது
நிரப்பப்படாத பானைகள்
வீட்டினுள்...


மழை சுத்தம்
--------------------

நேற்றைய மழையால்
தெரு முழுவதும்
சுத்தமானதாய்
பேசிகொண்டனர் அனைவரும்
எனக்கு தெரியும்
அது நிச்சயமாய்
அனைத்தையும் கழுவி செல்லவில்லையென்று.....


நானும்...
-------------

ஒரு
மழை நாளின் இறுதியில்
அவள் யாரிடமும்
எதுவும் சொல்லாமல்
திடீரென சென்றுவிட்டாள்....
அவள் ஏன்
அப்படிச் சென்றாள்
நீண்ட நேரத்திற்கு
யோசித்துக் கொண்டேயிருந்தேன்
ஒரு நாள்
நானும் கூட
அப்படிச் செல்லக் கூடும்....


மறைந்த..
--------------
ஊமையாகிப் போன
மழையின் வார்த்தைகளைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்
எனக்கு மட்டும்
கேட்கும் வகையிலேனும்
அது பேசக்கூடும்....


--பிரியா