பக்கங்கள்

கனவிலொன்று...

நேற்று கனவில்
கவிதை ஒன்று கண்டேன்
ஒய்யாரமாய்
வார்த்தைகள் கோர்க்கப்பட்டு
பொய்யும், புனைவுமாய்
மெய்யும், உணர்வுமாய்
அத்தனையும் கலந்து
அந்தரத்தில் தொங்கியபடி....

பாவம் அது
தொங்குவதை சகியாமல்
அதற்கென்று ஓரிடம்
அமைத்திட எண்ணி
வேகமாய் தேடி ஓடினேன்
அங்கிங்கு என்று
எங்கும் தேடி
கச்சிதமாய் ஓரிடம்
அதற்கென்று பிடித்து
மகிழ்வுடன் வருகையில்
காணாமல் போயிருந்தது
அவ்விடமிருந்த கவிதை.....


--பிரியா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக