இருளும் ஒளியும்
இணைகின்ற காலமதில்
வெளிச்சத்தை பிடித்து
நிறுத்திடும் முயற்சியிது
நிலமென்ன கடலென்ன
எங்கும் வெல்லலாம்
வித்தியாசங்கள் ஏதுமில்லை
உயர்வொன்றே குறிக்கோளாய்
துள்ளட்டும் கால்கள்
துயரங்கள் நீங்கி
நீளட்டும் கைகள்
நீலவானையும் தாண்டி
தகிக்கும் ஆதவனோ
குளிரும் மாலையோ
என்னதான் செய்திடும்
எம்மான் உன்னை
உறுதி கொண்ட
உள்ளமது - உனக்கென
வாய்த்திருக்கும் வரையில்
தடைகளென்று ஏதுமில்லை...
வாழ்வோம் வா!
---பிரியா
குறிப்பு : இது சித்திரம் பேசுதடி முகநூல் பக்கத்திற்காக எழுதிய கவிதை