மழை - ஒரு வார்த்தையாகப் படிக்கும் போது கூட அது வெறும் வார்த்தையாக இல்லாமல் பல்வேறுபட்ட சிந்தனைகளையும், நியாபகங்களையும் , உருவகங்களையும் தூண்டி செல்லும் தன்மை வாய்ந்த ஒரு இயற்கைப் பேரதிசயம். மலை, நிலம்,காற்று என இயற்கையின் அத்தனை படைப்புகளுமே அதிசயந்தான். ஆனால், அதில் மழை ஒரு தனி ரகம்.