பக்கங்கள்

நூல் அறிமுகம் - நீலகண்டம்


நீலகண்டம் ஒரு வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால் நிறைய நிறைய துணைக்கதைகளைக் கொண்ட ஒற்றை நாவல். ஆனால் துணைக்கதைகள் அனைத்தும் நாவலுடனும், அதன் கதாபாத்திரங்களுடனும் ஒன்றுடன் ஒன்று பிண்ணிப் பிணைந்தவை. தமிழில் இப்படியான ஒரு நாவலை வாசித்ததாக பெரிதாக நினைவில்லை. நாவலின் முதல் அத்தியாயமே விக்கிரமாதித்தனும் வேதாளமும் என்றிருப்பதால் நாவலுக்குள் நுழைவதற்கு முன்னமே நாம் நம்முடைய கடந்த கால பால்யத்தினுள் நுழைந்துவிடுகிறோம்.  அதுவும் கூட காரணமாகத்தான் என்பது நாவலுக்குள் நாம் நுழைய நுழையத்தான் புரிகிறது.

நுகர்வுக் கலாச்சாரத்தில் வாந்துகொண்டிருக்கும் நம்முடைய வாழ்வென்பது பெரும்பாலும் பணமென்ற ஒன்றையே சார்ந்திருக்கிறது. தங்குதடையில்லாத அதன் வரவு மட்டுமே நம் இன்பம் துன்பம் அனைத்தையும் தீர்மானிக்கிறது. எந்த ஒரு கணத்தில் அதன் வரவென்பது தடைபடுகிறதோ, அல்லது தடைபடப்போகிறதோ என்ற எண்ணமும், பயமும் தலை தூக்குகிறதோ அங்கே அக்கணத்தில் அனைத்தும் சூன்யமாகிறது. நம்முடன் இருப்பவர்களின் மீதும், அவர்கள் அன்பின் மீது கரிசனத்தின் மீதும் மனம் சந்தேகம் கொள்ளத் தொடங்குகிறது. அவர்கள் எப்பொழுதும் போல இயல்பாக இருந்தாலும் நம்மால் அதை நம்ப முடிவதில்லை. ஏதோ ஒரு சந்தேகத்தை ஏதோ ஒரு குழப்பத்தை அது நம்முள் ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும் அதுதான் நீலகண்டத்தின் மையப்புள்ளியும் கூட. பிரச்சினைகள் ஏற்படுத்தும் குழப்பமும் அதன் தீர்வுகளும், மையக்கதையாக நகர்கிறது. அதன் சம்பவங்களின் நீட்சி ஆங்காங்கே கிளைக்கதைகளாக முளைத்துக் கிடக்கிறது.

கடல் மரங்கள் - புத்தக அறிமுகம்

அன்பு நண்பர்களுக்கு வணக்கம், 

நீண்ட நாட்களுக்குப் பிறகான இடுகையாக புத்தக அறிமுகம் ஒன்றை இடலாம் என்றிருக்கிறேன். இந்த அமீரக வாழ்க்கையில் மிகச் சில நாட்களாகக்  கிடைத்த அமீரக தமிழ் நண்பர்களின் அறிமுகத்தினால் தமிழ் இலக்கிய சந்திப்புகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. அதன் பலனாக மலையாள எழுத்தாளர் வெள்ளியோடன் அவர்களின்  புத்தகம்  ஒன்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கக் கிடைத்தது.

நீ

நீ என்பது நிஜமா
நீ என்பது பொய்யா
நீ என்பது சொரூபமா - இல்லை
நீ என்பது அரூபமா

நிதமும் பிறக்கிறாய்
நிதமும் மலர்கிறாய்
நிதமும் வடிக்கிறாய்
நிதமும் உதிர்ந்தும் போகிறாய்

இருப்பினும் இடைவெளியின்றி
அனைத்துமாய் அனைத்திலுமாய் - இதில்
நீ என்பதைத் தேடித்தேடி
தொலைந்து மறைந்து
அலுத்துப்போய் இறுதியில்
ஒன்றை உறுதிசெய்தபின் - நீ என்பது
ஏதுவாகவோ ஆகிப்போனாய்......


--பிரியா


இலையைப்போல....

ஒற்றைக் காலில்
சுற்றி சுழன்று
ஆடிக் கொண்டிருக்கும்
அந்த இலையின்
நடனத்தில் இலயித்திருக்கிறேன்....

தன்  தாளங்கள் பற்றிய கவலையில்லை
தன் அசைவுகள் குறித்து பிரங்ஞையில்லை
எவர் பார்ப்பார், எவர் என்ன சொல்லுவார்
எதுவுமே இல்லை
அந்த இலைக்கு....

காற்றுடன் கைகோர்த்து
தானாக கோர்த்த தாளத்தில்
தடம் பிடித்து செல்கிறது
இயல்பு மாறாமல்...

வாழ்ந்திட வேண்டும்
ஒரு நாளாகினும்
அந்த இலையைப்போல.....

--பிரியா 

கனவிலொன்று...

நேற்று கனவில்
கவிதை ஒன்று கண்டேன்
ஒய்யாரமாய்
வார்த்தைகள் கோர்க்கப்பட்டு
பொய்யும், புனைவுமாய்
மெய்யும், உணர்வுமாய்
அத்தனையும் கலந்து
அந்தரத்தில் தொங்கியபடி....

பாவம் அது
தொங்குவதை சகியாமல்
அதற்கென்று ஓரிடம்
அமைத்திட எண்ணி
வேகமாய் தேடி ஓடினேன்
அங்கிங்கு என்று
எங்கும் தேடி
கச்சிதமாய் ஓரிடம்
அதற்கென்று பிடித்து
மகிழ்வுடன் வருகையில்
காணாமல் போயிருந்தது
அவ்விடமிருந்த கவிதை.....


--பிரியா 

மழைத் தோழி (ஒரு தொடர்)

மழை - ஒரு வார்த்தையாகப் படிக்கும் போது கூட அது வெறும் வார்த்தையாக இல்லாமல் பல்வேறுபட்ட சிந்தனைகளையும், நியாபகங்களையும் , உருவகங்களையும் தூண்டி செல்லும் தன்மை வாய்ந்த ஒரு இயற்கைப்  பேரதிசயம். மலை, நிலம்,காற்று என இயற்கையின் அத்தனை படைப்புகளுமே அதிசயந்தான். ஆனால், அதில் மழை ஒரு தனி ரகம்.

சிதறல் - 21

உறவு
=====
என்
எதிர்பாராத் தருணங்களை - இன்னும்
இதமாக்கிச் செல்வதில்
இருக்கிறது
எனக்கும் மழைக்குமான
பந்தம்

சில்லறை வணிக அரசியல்

 ஒரு சூப்பர் மார்க்கெட்டில் காய்கள் வாங்க சென்றிருந்தோம். வாங்கி முடித்து பணம் செலுத்துகையில் மீதி சில்லறைக்கு காசாளர் பெண் சில்லறைக்கு பதில் சாக்கலேட் கொடுத்தார். நான் அதை திருப்பி கொடுத்து எனக்கு சாக்கலேட் வேண்டாம் சில்லறை தொகை தான் வேண்டும் என்று கேட்க எனை வித்தியாசமாக பார்த்து முறைத்து கொண்டே சில்லறையைத் தந்தார்.

கீதா

லிப்ட் இல்லாத அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டாரின் மூன்றாம் தளத்திலிருந்து லிப்ட் வைக்காத முதலாளியை சபித்துக் கொண்டே வரும்போதுதான் மூன்றாவது இரண்டாவது தளங்களுக்கு மத்தியில் அனுவை  சந்திக்க நேர்ந்தது.நாங்கள் இருவரும் பள்ளித் தோழிகள். நீண்ட நாட்களின் பிறகு எதிர்பாராமல் சந்தித்து கொண்டதில் இருவரின் முகத்திலுமே அத்தனை மகிழ்ச்சி.

பரஸ்பர நலம் விசாரிப்புகளுக்குப் பின் கீழ்த்தளத்தின் உணவுப் பகுதியில் எங்கள் அரட்டை தொடர்ந்தது. பேச்சு பல கட்டங்களைத் தாண்டி எங்கள் பள்ளி வாழ்க்கையைக் குறித்து சென்றது. பள்ளியில் அடித்த லூட்டிகள் எங்கள் நண்பர் கூட்டம் என்று நீண்டு கொண்டே சென்ற பேச்சில் எங்கிருந்தோ நுழைந்தது கீதாவின் நியாபகம்.

கீதாவும் எங்கள் பள்ளித் தோழிதான், மிக நன்றாக படிக்கும் மாணவி. பள்ளி இறுதி ஆண்டில் அவளே அதிக மதிப்பெண் பெற்று பள்ளியின் முதல் மாணவியாகத் தேறினால்.மேல்நிலைப்  பள்ளியில் அவள் முதல் பிரிவு (கணிதம், உயிரியல் பிரிவு) மாணவி, நாங்கள்  இரண்டாம் பிரிவு (கணிப்பொறி அறிவியல்). இருப்பினும் இரு பிரிவிற்கும் பொறியியல், கணிதம், இயற்பியல் பாடங்கள் கூட்டாக வைத்துதான் நடத்தப்படும், ஆதலால் அவளுக்கும் எங்களுக்கும் நல்ல அறிமுகம் இருந்தது, பின்னர் அது நல்ல நட்பாகவும் மாறியது.

பதினொன்றாம் வகுப்பு பாதி முடிந்திருந்த போதே எங்கள் நட்பு நன்கு பலப்பட்டது, அப்படியே அவள் குடும்பம் குறித்தும் தெரிந்தது. கீதாவுக்கு ஒரு தங்கை, படித்துக் கொண்டிருந்தாள், அம்மா  கூலித் தொழிலாளி, அப்பாவிற்க்கு இவர்களை விடுத்து வேறொரு குடும்பம் இருந்தது, அவர் அவர்களுடன்  இருந்தார். இருப்பினும் அவர் பிள்ளைகளை அவ்வப்பொழுது வெளியில் சந்தித்து நலம் விசாரித்து சிறு தொகை  செலவிற்கு கொடுப்பதுண்டு, கீதாவின் குடும்பம் அவள் தாயின் பெற்றோருடன் வசித்து வந்தனர். அவர்களும் கூலி வேலை செய்பவர்களே.

கீதா காலை பள்ளிக்கு வருவதற்குள் அங்கே உள்ள தேங்காய் கலங்களில் அதிகாலையிலேயே சென்று தேங்காய் உடைத்து விட்டு பின்பு பள்ளி வருபவள், அதனால்  எப்பொழுதும்  காலை உணவு சாப்பிட  நேரம் இருக்காது , மதிய உணவும் பல நேரங்களில் இருக்காது . அத்தகைய தருணங்களில் நாங்கள் தோழிகள்  எங்களுடைய உணவை அவளுடன் பகிர்ந்து கொண்ட நாட்களும் உண்டு.

பள்ளி  முடிந்ததும் நாங்கள் அவரவர் விருப்பப்படி அடுத்த அடி எடுத்து வைக்க கீதா அசிரியர் பயிற்சி படிப்பில் சேர்ந்தால். அதன் பிறகு சிறிது காலம் எங்களுக்குள் தொடர்பு இல்லை. பின்பு ஒரு முறை கீதாவை கடைவீதியில் சந்திக்க நேர்ந்த பொழுது தான் ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்து விட்டு ஒரு டுட்டோரியலில் வேலை செய்து கொண்டே  பகுதி நேர கல்லூரியில் இளநிலை கணிதம் படித்துக் கொண்டு இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினால்.

இதுவே அதுவரை எனக்கு தெரிந்த விவரங்கள்.அதன் பிறகு அனு கூறிய விவரங்கள் என் மனதில்  ஒரே நேரத்தில் பல்வேறு உணர்ச்சிகளைத் தூண்டி விட்டன.

கீதாவை  நான் இறுதியாக சந்தித்த பொழுதே அவள் பாட்டியும் அப்பாவும் இறந்து விட்டிருந்தனர். அவள் கல்லூரிப் படிப்பை முடிக்கும் தருவாயில் அம்மாவும் இறந்து விட, இவர்களுக்கு ஆதரவிற்க்கு யாருமற்ற நிலை. இவள் கல்லூரி முடிந்ததும் ஒரு அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து பொறுப்பாய் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடித்து அவள் வீட்டின் அருகிலேயே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து, அதிலேயே அவர்களை குடியமர்த்தி தாயின் இடத்திலிருந்து தங்கைக்கு வளைகாப்பும் நடத்தியிருக்கிறாள்.  இந்த விவரங்கள் அனைத்தும் அனு  கீதாவை சந்தித்த பொழுது அவள் கூறியவை. அப்பொழுது கீதாவிடம் அவள் திருமணம் குறித்து கேட்க சிரிப்பு மட்டுமே விடையாக வந்துள்ளது .

எப்பொழுதுமே கீதாவின் பண்பும் அறிவும் எங்களுக்கு வியப்பைத் தருபவை. ஆனால் அனைத்தையும் தாண்டி இந்த சிறு வயதில் அவளுக்கிருந்த பொறுப்புணர்வும், தங்கையின் மீதான அவள் தாயன்பும் மனதை ஏதோ செய்தது.

"அக்கா என்பவள் இன்னொரு அம்மா" என்ற சொலவடைதான் எவ்வளவு உண்மை. இவளைப்  போல் தாயுமாயும் தந்தையுமாயும் அமையும் அக்காக்கள் எத்தனை பேருக்கு அமைவர். சிந்தனையிலேயே கழிந்தது பொழுது .

புதுப் பொங்கல்

புதுப் பொங்கல்
==============

பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் 
முன்னோட்டம் ஓடுகிறது 
சின்னத்திரையில் 
"பொங்கல்னா லீவு 
எல்லார் வீட்டுக்கும் போலாம் ஜாலி"
இத்தனைதான் பொங்கலுக்கான 
தொகுப்பாளினியின் விளக்கம்