பக்கங்கள்

ஒரு வெளிநாட்டுத் தந்தை....




கனவுகள் காண்கிறேன் நிதமும்
கண்ணே உன்னைக் கண்டிடும்
திருநாள் நோக்கியே!

தேசங்களின் தூரங்களின் மீது
இதுவரை இல்லாத கோபம்
வந்ததென்ன இப்போது உன்னாலே!

இந்தியா பெண்களுக்கான தேசமா?


இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் ஒரு கேள்வி என்ற பெயரில் பெண்ணிய கவிதை ஒன்றை எழுதி இருந்தேன்... அந்த கவிதைக்கு இங்கே எதிப்புகள் எதுவும் இல்லை என்றாலும் முகநூலில் மிகப் பெரிய அளவில் எதிர்ப்பை சந்தித்தேன்... நான் ஏதோ இல்லாத ஒன்றை கவிதையாய் கர்ப்பனையில் வடித்தது போல.

யாருக்காக யாரை நினைத்து ஏழுதினேனோ அந்தப் பெண் வர்க்கத்தை சார்ந்தவர்களிடமே எதிர்ப்பை சம்பாதித்தது அவர்களுக்கு என் எழுத்தின் உண்மையைப் புரிய வைக்க மிகப் பெரிய பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டி இருந்தது... இதற்க்கும் அக்கவிதையின் மிக முக்கிய கருப்பொருள் வரதட்ச்சணைக் கொடுமையும் பெண்களின் அடிமை நிலையுமே ஆகும்.


இதை இப்பொழுது இங்கே பகிர காரணம் இணையத்தில் இன்று பார்த்த B.B.C ன் India a Dangerous Place to be a woman என்ற ஒரு மணி நேர டாகுமென்ட்ரி. இந்த படத்தைப் பார்க்கையில் எனக்கு அந்த நினைவுகள் மீண்டெழுந்து வந்தன அதனால்தான்.. கீழே அதனுடைய வீடியோ லின்க் கொடுத்துள்ளேன் உங்கள் நேரத்தின் ஒரு மணித் துளியை நிச்சயம் நீங்கள் இதற்க்காக செலவு செய்யலாம் தவறொன்றும் இல்லை..

தொலைத்ததும் தொலைந்ததும்

எண்ணக் கிறுக்கல்களின்
எல்லைக்குள் அடைந்து
நடைபோடும் நாட்களில்
மறைந்திருக்கிறது பலவற்றின்
தொடக்கமும் முடிவும்

ஒரு கேள்வியும் ஒரு பதிலும்


ஒரு கேள்வி
------------------

அவரவர்க்கானதை அவரவர்
தேடிக் கொண்டிருக்க - இங்கே
"பொதுவானவை" என்று
எவை இருக்கக் கூடும்



ஒரு பதில்
---------------
ஒரு புரிதலுக்கான
போராட்டத்தின் பின்னே
உனக்கானவையும் எனக்கானவையும்
மாறுகின்றன
"நமக்கானவையாய்"







-- பிரியா


கடலும் கிழவனும் (மொழிபெயர்ப்பு நூல்)

அறிமுகம்:

எழுத்துக்கள் அனைத்திற்க்கும் ஆதாரமாய் இருப்பது நல்ல வாசிப்புத் தன்மையே.அந்த அளவில் நான் வாசித்த என்னை மிகவும் கவர்ந்த சில புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் முயற்ச்சியாக புத்தக அறிமுகம் என்ற புதிய பகுதியை இன்று முதல் தொடங்குகிறேன். இதில் முதல் நூலாக எர்னெஸ்ட் ஹெமிங்க்வே என்ற ஆங்கில எழுத்தாளரின் The old man and The sea தமிழில் கடலும் கிழவனும் என்ற சிறு நாவலை இங்கே பகிற்கிறேன்.

சிதறல் - 4



நினைவுகளினூடே
------------------------

யாருமற்ற 
கணங்களின் யோசிப்பில்
ஏதோ ஒன்றின் 
ஆரம்பப் புள்ளியாய்
சில நினைவுகள்