பக்கங்கள்

எண்ணங்கள்


சாலைகளில்
என் பயணங்களில்
ஒரு கணம்
என்னை நிலைநிறுத்தி
செயலறுக்கச்  செய்கின்றன
சில எண்ணங்கள்

ஓநாயும் ஒரு சரீரமும் - மகளிர்தினத்திற்க்காக


ஓநாயால் குதறப்பட்ட - அழகிய 
சரீரமொன்றைக் கண்டேன்
ஒரு நாள் !

ஏராள குரல்கள் ஒலித்தன 
வீழ்ந்து கிடந்த
சரீரத்தைச் சுற்றிலும்... 

ஓநாய் குதறியதான் காரணம் என்ன?
விவாதித்தன குரல்கள் 
தத்தம் பாணியில் 

"உடை" என்றது  ஒரு குரல் 
"நேரம்" என்றது  ஒரு குரல் 
"அழகு" என்றது  குரல் 
"அலங்காரம்"என்றது ஒரு குரல்

இத்தனை குரல்களிடையே, 

குதறிய "ஓநாயைப்" பற்றியும்
பேசியது ஒரு குரல் 
பாவம் அது கூச்சல் குழப்பத்தில்  
மறைந்தது காற்றுடன் கலந்து ...

"சரீரம் எத்தனை அடி
சரீரத்தின் உடை என்ன 
சரீரத்தின் நிறம் என்ன"
ஆராய்ந்து ஆராய்ந்து - உலகிற்கு 
உரைத்தபடி சில குரல்கள் ...

அனைவரையும் அடக்கி அசரீரி ஒலித்தது 
"அடப் பிணந்தின்னிப் பேய்களே!
ஆராய்ந்தது போதும் சரீரத்தை 
பிடியுங்கள் அந்த ஓநாயை
மற்ற சரீரங்களாயின் தப்பிக்கலாகட்டும்!"

இரத்தவெறியேறிய கண்களுடன்
கூட்டத்தைப் பார்த்து 
குரூரமாய் சிரித்தது 
மறைந்திருந்த ஓநாய்!



--பிரியா 


இன்று உலக மகளிர் தினம்... இத்தினத்தில் அனைவருக்காகவும், எனக்காகவும்.....


நூல் விமர்சனம் - ஆவிப்பா மற்றும் மொட்டைத்தலையும் முழங்காலும்

புத்தகங்களுக்கான அறிமுகத்தில் இம்முறை இரண்டு புத்தகங்கள். ஒன்று கவிதை புத்தகம் மற்றொன்று நகைச்சுவை சிறுகதைகளின் தொகுப்பு. இரண்டு புத்தகங்களுக்கும் உள்ள மிகப் பெரிய ஒற்றுமை இரண்டுமே நம் பதிவர்கள் எழுதி வெளியிட்ட புத்தகங்கள்.

ஒன்று "கோவை ஆவிஅவர்களின் "ஆவிப்பா" கவிதை தொகுப்பு, மற்றொன்று சேட்டைக்காரன் அவர்களின் மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற சிறுகதைகளின் தொகுப்பு.

சிதறல் - 9

அச்சாரம்
------------
                 
என் அத்தனை
நகர்வுகளிலும் என்னுடன்
சுற்றி சுழல்கிறது - உன்
அன்பெனும் அச்சாரம்

                                     -----X-----


புன்னகை
-------------

ஒரு
மந்திரக் கோலாய்
எப்பொழுதும்
எனக்கான புன்னகையை
தாங்கி வருகிறது
நீ அனுப்பும்
குறுஞ்செய்தி

                                     -----X-----




தூறலிலும் ....
--------------

எனக்கான
அத்தனை தூறல்களிலும்
ஒளிந்திருக்கிறது
உனக்கான எதிர்பார்ப்பு...

     
                                     -----X-----
 


தெரியுமா?
--------------

இறுதியாக கேட்க்கிறேன்..
எனக்கு
காதல் கவிதைகள்
எழுத வருவதில்லை
என்ற இரகசியம்
உனக்கு தெரியுமா?


--பிரியா 

நூல் அறிமுகம் - அபிதா


புத்தக அறிமுகங்கள் ஆரம்பிக்கப்பட்டு இது வரை மூன்று புத்தகங்களும் மொழி பெயர்ப்பு நூல்களாகவே அமைந்தன. பெரிதாக அதற்கென்று காரணங்கள் எதுவும் இல்லை. என்னுடைய வாசிப்பும் அவ்வரிசையில் அமைந்து விட்டதால் அறிமுகமும்  அவ்வாறே  அமைந்தது. இம்முறை அவ்வரிசையில் நான்  இங்கு எடுத்து வந்திருப்பது ஒரு அற்ப்புதமான காலங்கள் கடந்து நிற்க்கும் தமிழ் எழுத்தாளர் ஒருவரின் நாவல்.. நாவலின் பெயர் "அபிதா" .. எழுதியவர் "லா.ச.ரா" என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட லா. சா. ராமாமிருதம்.