பக்கங்கள்

அமிலம் தொட்ட மலர்கள்


தொடர்ந்தே வருகிறது
வண்டுகள் துளைத்த
பூக்களின் மரணம்

சமூகத்தின் எச்சங்கள்
வரிசையாய் நிற்கின்றன
அடுத்தது யாரோ

எழுதி ஓய்ந்து
அழுகிறது மையும்
அடக்க வழியின்றி

முளைத்தெழும் கல்லறைகள்
வலியுடன் சொல்கிறது
பெண்ணினத்தின் அவலம்

எழும்புகின்றன கூக்குரல்கள்
எங்கெங்கும் ஓயாது
எவரோ கேட்பவர்?

எங்கேதான் குற்றம்
வளர்ந்த சமூகமா?
பிறந்த வீடா?

பாட்டிலும் எழுத்திலும்
பெண்மையை போற்றியே
பேருவகை கொண்டோமா?

எப்போதுதான் புரிவோம்
வாழும் உரிமை
எல்லோர்க்கும் உண்டென்று

யோசிக்கும் கணங்களில்
அமிலத்தில் கரைகின்றன
அழகான பூக்கள்


--பிரியா

ஏதாகிலும் ஒன்றை....



இன்று ஏதாகிலும் ஒன்றை எழுத வேண்டும்
இதோ எடுத்தாயிற்று காகிதமும் எழுதுகோலும்....

உனக்காக ...





நெடுந்தூரப் பயணங்களிலும்
நீங்காத நினைவுகளிலும்
உன்னையும் சேர்த்து
அலைகிறேன் நான் - நாள்தோறும்

அம்மாவிற்காய் ....




உன் பிரார்த்தனைகள்
உன் சந்தோஷங்கள்
உன் கனவுகள்
அனைத்தும் எனக்காய்!
உன் அழுகைக்கும் கூட
சில சமயம் அர்த்தம் நானே!
இழந்துவிட உன் சொந்தங்களின்
ஒற்றை எதிரி நானே!
இப்படி உனக்கான அனைத்துமாய் நான்
எனக்கான அனைத்துமாய் நீ
உனக்கென எதைத்தந்திட
முடியும் என்னால்
என் அன்பை விட பெரிதாய்.......

Love u ma always......
thank u for being my side in all the situations.......


--பிரியா

சிதறல்கள் - 1


1)தெருவிளக்கு

விடிய விடிய போராடி
விடிந்தபின் ஒய்வு எடுக்கும்
கொள்கை வீரன்...
'தெருவிளக்கு'


2)அறிவு

அனர்த்தங்களை
அர்த்தங்கள் ஆக்கும்
மானுட விந்தை - அறிவு



3)கனவு....

முடிந்துபோன நேற்றைக் கொண்டு
முகம் தெரியாத நாளைக்காக
கண்கள் கட்டும் கயிற்று பாலம்


4)வாழ்க்கை...

சந்தோஷத்தில் பூத்து
துக்கத்தில் முடியும்
நிதர்சன உண்மை

--பிரியா