பக்கங்கள்

சிதறல் - 19

முடிவற்ற 
==========
வாடிய பூக்களின் 
இதழ்களைக் கோர்கையில் 
விரலின்வழி பரவிச் செல்கிறது
மகரந்த வாசம்


இருப்பு 
=======

உதிர்ந்த கிளையொன்றின்  
வாசம் பரவிச்  செல்கிறது 
காற்றின் வழி - அதன் 
இருப்பை சொல்லியபடி 

மாற்றம் 
=======

மெலிதாய் தலையாட்டும் 
பூவிதழ்களுக்கு தெரிவதேயில்லை 
தன்னை தாலாட்டும் 
இந்த காற்றுதான் - சில 
மலைகளைப் புரட்டிப்  போட்டதென்று'

முரண் 
=======

குளிரூட்டப்பட்ட 
அறையில் அமர்ந்தபடி 
இரசித்துப் படிக்கின்றேன் 
மழையின் கவிதைகளை 



--பிரியா 

3 கருத்துகள்: