எங்கிருந்தோ வந்ததொரு 
வெளிச்சப் பறவை 
இருட்டினுள்  நானடைய 
நினைக்கும் பொழுதுகளில் - என் 
திசை மாற்றிச் செல்ல 
என்னவென்று அறியாத 
மாயமொன்று அதன் 
திசைகளின்  வழியே 
தனைமறந்த நிலையில்  - எனை 
வழிநடத்திச் செல்கிறது 
அதன் அகண்ட 
வெளிச்சச் சிறகினடியில் 
உயிர்பெற்று எழுகிறது 
கருகிப்போன கனவுகளும் - பெரும் 
மழைகண்ட நிலமாய் 
வெல்லாத என் சொல்லும் 
தோற்காத அதன் சொல்லுமாய் 
விரிகின்ற பிராமண்டத்தில் 
மறைகின்றது - எனை சூழ்ந்த 
மொத்த இருளும்.
-- பிரியா 
குறிப்பு : நானடைய - நான்+அடைய - 
அடைதல் - கூடு சேருதல் என்னும் பொருள் (பறவைகள் கூட்டினுள் அடைதல் போல) 
.jpg)
வணக்கம்
பதிலளிநீக்குகவிதையின் வரிகள் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குத.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாக்களித்தமைக்கும் நன்றிகள்... :)
நீக்கு// வெல்லாத என் சொல்லும்
பதிலளிநீக்குதோற்காத அதன் சொல்லுமாய்... //
அருமை சகோ...
நன்றி அண்ணா... :)
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி சகோ... :)
நீக்குகருகிப்போன கனவுகளும்-பெரும்
பதிலளிநீக்குமழைகண்ட நிலமாய்...
நான் ரசித்த நல்லவரிகள்... வாழ்த்துக்கள் சகோதரி.
Killergee
www.killergee.blogspot.com
மிக்க நன்றி சகோ தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.... :)
நீக்குஅருமையான கவிதை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ் சார்... :)
நீக்குபடத்திற்கேற்ப கவிதை வரிகளைக் கண்டு ரசித்தேன் இனிய வலைத்தள நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமை கொள்கிறேன் தோழி வாழ்த்துக்கள் .
பதிலளிநீக்குமிக்க நன்றி அம்மா... உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்... :)
நீக்குரசித்தேன் கவி வரிகளை அருமை தொடர வாழ்த்துக்கள் ....!
பதிலளிநீக்குநன்றி சகோ... :)
நீக்கு