பக்கங்கள்

சிதறல் - 15

நிரம்பாத...
--------------

நேற்றைய மழைக்கு
முற்றத்தில் வைத்திருந்த
பாத்திரங்கள் அனைத்தும்
நிரம்பி விட்டன - ஆயினும்
இன்னமும் இருக்கிறது
நிரப்பப்படாத பானைகள்
வீட்டினுள்...


மழை சுத்தம்
--------------------

நேற்றைய மழையால்
தெரு முழுவதும்
சுத்தமானதாய்
பேசிகொண்டனர் அனைவரும்
எனக்கு தெரியும்
அது நிச்சயமாய்
அனைத்தையும் கழுவி செல்லவில்லையென்று.....


நானும்...
-------------

ஒரு
மழை நாளின் இறுதியில்
அவள் யாரிடமும்
எதுவும் சொல்லாமல்
திடீரென சென்றுவிட்டாள்....
அவள் ஏன்
அப்படிச் சென்றாள்
நீண்ட நேரத்திற்கு
யோசித்துக் கொண்டேயிருந்தேன்
ஒரு நாள்
நானும் கூட
அப்படிச் செல்லக் கூடும்....


மறைந்த..
--------------
ஊமையாகிப் போன
மழையின் வார்த்தைகளைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்
எனக்கு மட்டும்
கேட்கும் வகையிலேனும்
அது பேசக்கூடும்....


--பிரியா

5 கருத்துகள்:

  1. பெருஞ்
    சத்தங்களை
    சுமந்தே
    சூழ்ந்திருக்கிறது
    மழைச்சாரல்
    என்றேனும்
    விரைவில் வரும்
    பேசுவதற்கு,,

    -வாழ்த்துக்கள்-

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    இரசித்தேன்
    குறுங்கவிகள் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. நேற்றைய மழையால்
    தெரு முழுவதும் சுத்தமானதாய்
    பேசிக்கொண்டனர் அனைவரும்.
    எனக்குத்தெரியும்
    அது நிச்சயமாய்
    அனைத்தையும் கழுவிச்செல்லவில்லையென்று...''///

    superb... நீண்ட நாட்களுக்குப்பிறகு வலைத்தளத்திற்கு வந்திருப்பதால் உங்களுடைய பல சிதறல்களை நான் மிஸ் பண்ணியிருக்கிறேன். அனைத்தையும் படிக்கவேண்டும்...
    இந்தக்கவிதை மிக மிக அருமை... வித்தியாசமான கோணத்தில் சிந்தித்த யதார்த்தம்...

    பதிலளிநீக்கு