பக்கங்கள்

காகிதக் கசங்கல்கள்


கசக்கிப் போட்ட 
காகிதக் குப்பைகளின் 
கசங்கல்களின் 
இடைவெளியின் வழியே 
ஒரு எழுத்தோ 
ஒரு சொல்லோ 
ஏதோ ஒன்று 
ஏக்கப் பார்வையுடன் - என்னை 
எட்டிப் பார்க்கிறது

கணப்பொழுதின் துகள்களின் 
இடைவெளியின் வழியே 
அந்த ஏக்கத்தை 
கண்டு கொள்கின்றன 
என் கண்களும் 
கேள்வியுடன் 

ஏக்கமும், கேள்வியும் 
சந்தித்த தொனியின் 
இடைவெளிக்கிடையில் 
நசுங்கிப் போகின்றன 
பல கேள்விகளும் 
சில பதில்களும்



-- பிரியா 

20 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நன்றி தனபாலன் சார்... எழுத்தே அதர்க்கான முயற்ச்சி தானே... :)

      நீக்கு
  2. //நசுங்கிப் போகின்றன பல கேள்விகளும் சில பதில்களும்//
    ஆம்.. பல நேரங்களில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அத்துடன் செர்ந்து இன்னும் சிலதும்... இல்லையா சகோ?

      நீக்கு
  3. சிதைந்து போகட்டுமே வலிகள்
    செதுக்கட்டும் சிந்தனை மேலும்...!

    மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தோழி.... சிதைந்து போக வேண்டும் என்ற ஆசைதான்.... :)

      நீக்கு
  4. உள்ளத்தின் கசங்கல்கள்
    கிறுக்கும் வலிகள் இங்கே
    காகிதங்களையும்
    கசக்கிச் செல்கிறது ...!

    அருமை வாழ்த்துக்கள் ப்ரியா

    பதிலளிநீக்கு
  5. வலி நிறைந்த வார்த்தைகள் இங்கே கவிதை வரிகளாக
    மிக அற்புதம் .வாழ்த்துக்கள் தோழி .இனிய கவிதை
    வரிகளும் இனிதே தொடரட்டும் .

    பதிலளிநீக்கு
  6. மிக்க நன்றி சகோ... நிச்சயம் தொடர்கிறேன்..

    பதிலளிநீக்கு