பக்கங்கள்

சிதறல் - 12


புரியாத புதிர்
-------------------

எத்தனை முறைதான் எரிப்பது
துளிர்க்காத மரத்தின்
நனையாத வேர்களை....





                                                                       ---X---

சலித்துப்போகிறேன்...
-------------------------------

கேட்டுக் கேட்டு 
பெறாத பதில்களுக்கு 
எத்தனை கேள்விகள்
விடாத மழையாய்

                                                                        ---X---

                                                                   

மீண்டும் மீண்டும்
--------------------------
சலித்துப் போயின
கண்ணகியின் பரல்கள்
கோவலன் சபையில்
எத்தனை முறைதான்
பட்டுத் தெறிப்பது
நீதியற்ற நியாயத்திற்க்காய்....




                                                                       ---X---


நிச்சயமாய்.....
----------------
அவிழ்ந்து விழும் நுனியின்
கடைசி முடிச்சுடன்
மொத்தமாய் விழுவர்
இந்த துச்சாதனர்கள்
என்றாகிலும் ஒரு நாள்....






--பிரியா 

4 கருத்துகள்:

  1. துச்சாதனர்களுக்கு இந்தச் சாட்டையடி உறைக்குமா என்ன...? வரிகள் வேதனையும் கோபமும் ஒருங்கே கொண்டு சுள்ளென்று விழுந்திருக்கின்றன. நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ற்றைகானும் உறைக்கும் என்ற நம்பிக்கையில் தானே அண்ணா நகர்கிறோம்.... ஹ்ம்ம் எழுத்தில் மட்டும் தானே காட்ட முடிகிறது

      நீக்கு