பக்கங்கள்

சிதறல் - 17

வாழ்தல்
---------------
கிளைகளையும்
இலைகளையும் தாண்டி
பரவிக் கிடக்கிறது
அந்த மரம்
நிழலின் வழி


                            -----X-----

குழப்ப நிலை
--------------------
இடைவெளியின்றி
சிதறிக் கிடக்கும்
குறுக்குக் கோடுகளில்
எத்தனை முயன்றும்
கண்டறிய இயலவில்லை
இந்தக் கோடு
எங்கே தொடங்கி
எங்கே முடிகிறதென்று

                           -----X-----

இன்னமும் 
-----------------
இன்றைய பொழுது
எனக்கானதாய் புலர்ந்திருந்தது
என்பதை அறிவதற்குள்
உச்சி வந்து விட்டது
இருக்கட்டும் 
இன்னமும் இருக்கிறதே மாலையும் இரவும்

                   -----X-----

வித்தியாசம்
--------------------
நீள் வெளிச்சம்
சிதறிக் கிடக்கும் அறையினுள்
இருட்டு பறந்து கிடக்கின்றது
ஒரு பாகம் வெட்டுப்பட்ட
சதுரம் போல்





--பிரியா

8 கருத்துகள்:

  1. கிறுக்கிய கோடுகளில்
    ஒழிந்தே இருக்கும்
    தொடக்கமும் முடிவுமாய்
    வலிகளையும் கண்டறிய
    முடியவில்லை
    வாழ்வின் வட்டத்தில்

    அருமை பிரியா
    அத்தனையும் ரசிக்கும் படியாய் இருக்கிறது
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்

    இரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. இந்தக் கோடு எங்கே தொடங்கி எங்கே முடிகிறது என்று தெரியவில்லை.ம்..ம்..ம் அப்படித் தானே எங்கள் தலை விதியும் இல்லையா பிரியா.
    அருமையான சிந்தனைகள்! தொடர வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உறவுகளைப் பிரிந்து வாழும் அனைவரின் நிலையும் அப்படியே சகோ... :)

      நீக்கு