பக்கங்கள்

மணிவண்ணன் என்றொரு மாமனிதர்

ஒரு திரை உலக பிரமுகரின் மறைவிற்கு மனம் மிகவும் அழுகிறதென்றால் அது நிச்சயமாக இவர்தான்... நான் அதிகம் நேசித்த மிக சிறந்த நடிகர்... காமெடியோ குணசித்திரமோ அனைத்திலும் முத்திரை பதிப்பவர்.... தமிழ் திரையுலகில் உண்மையிலேயே தமிழீழ மக்களுக்கு ஆதரவு அளித்த நல்ல மனிதர்... எந்த விதமான அரசியல் சமரசங்களுக்கும் கட்டுப் படாதவர்... இயக்குனர், நகைச்சுவையாளர், பகுத்தறிவாளர், தமிழுணர்வாளர், நடிகர் என பன்முக முகங்களுக்குச் சொந்தகாரர்...





"மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல்பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம்"






உண்மைதான் இன்று,


இந்த மழைத்துளி இப்பொழுது
இந்த மண்ணில் சங்கமித்தது


மிகுந்த வழியுடன் எழுதும் வார்த்தைகளில் இதுவே   இறுதியாக  இருக்கட்டும். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்...


--பிரியா 

14 கருத்துகள்:

  1. நல்ல படைப்பாளி...

    அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு
  2. அட கடவுளே...

    மனதில் நீங்கா இடம்பிடித்தவரன்றோ...

    ஆத்ம சாந்திக்காக மனதார வேண்டுகிறேன்!...

    பதிலளிநீக்கு
  3. ''மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் '' மிகவும் பொருத்தமான, மிகச்சரியான பாடல் இணைத்துள்ளீர்கள்.
    அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. அன்னாரின் ஆத்மசாந்திக்கு பிரார்த்தனைகள்..!

    பதிலளிநீக்கு
  5. மனம் கவர்ந்த படைப்பாளி! என்றும் மனதில் வாழும படைப்பாளி! அவரின் ஆன்ம சாந்திக்கான பிரார்த்தனைகளில் உங்களுடன் நானும்!

    பதிலளிநீக்கு
  6. மாறாத புன்னகையில்
    மறைந்திட்ட உனதான்மா
    என்றென்றும் இறையடியில்
    இணைந்தே இருக்கட்டும்...!

    பதிலளிநீக்கு
  7. ஒரு மனிதரை இழந்து விட்டது தமிழ் திரைஉலகம்

    பதிலளிநீக்கு