பக்கங்கள்

சிதறல்கள் - 1


1)தெருவிளக்கு

விடிய விடிய போராடி
விடிந்தபின் ஒய்வு எடுக்கும்
கொள்கை வீரன்...
'தெருவிளக்கு'


2)அறிவு

அனர்த்தங்களை
அர்த்தங்கள் ஆக்கும்
மானுட விந்தை - அறிவு



3)கனவு....

முடிந்துபோன நேற்றைக் கொண்டு
முகம் தெரியாத நாளைக்காக
கண்கள் கட்டும் கயிற்று பாலம்


4)வாழ்க்கை...

சந்தோஷத்தில் பூத்து
துக்கத்தில் முடியும்
நிதர்சன உண்மை

--பிரியா




10 கருத்துகள்:

  1. சிதறல்கள் அருமை.தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. 4)வாழ்க்கை...

    சந்தோஷத்தில் பூத்து
    துக்கத்தில் முடியும்
    நிதர்சன உண்மை

    உங்கள் கவிதைகளும் உண்மைதான் ப்ரியா

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. அனைத்தும் அருமை... முக்கியமாக 2 & 4

    ரசித்தேன் 1 & 3

    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. சிதறல்களில் 3ம் 4ம் மனதை இழுத்துப் பிடித்து வெகுவாக ரசிக்க வைத்தன. மற்ற இரண்டும் ஓ.கே.தான். இந்தக் குறுங்கவிதைச் சிதறல்களைத் தொடருங்கள் ப்ரியா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் இன்னும் சிறப்பாய் எழுத முயற்சிக்கிறேன்... மிக்க நன்றி.. :)

      நீக்கு

  5. வணக்கம்!

    புதுகவிதை கண்டு புகழ்ந்தேன்! மயக்கும்
    மதுகவிதை என்றே மகிழ்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அய்யா... தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்...

      நீக்கு
  6. அனைத்துமே அருமை. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு